
திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் குட்செட் சாலையில் பழனிவேல்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயதான 2 சிறுமிகளுக்கு அவ்வபோது தின்பண்டங்களை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அந்த சிறுமிகளுக்கு தின்பண்டங்களை வாங்கி கொடுத்து, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் பயந்துபோன சிறுமிகள் யாரிடமும் இதைப் பற்றி கூறவில்லை. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான அந்த சிறுமிகள், தன் வயதுடைய சிறுவன் ஒருவரிடம் கூறியுள்ளனர். அதன் பின் அந்தச் சிறுவன் இது குறித்து அந்த சிறுமிகளின் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து இரண்டு சிறுமிகளையும் அவர்களது பெற்றோர் விசாரித்தனர். அப்போது அந்தச் சிறுமிகள் தனக்கு நேர்ந்த துன்பத்தை அழுது கொண்டே கூறினார். இது தொடர்பாக அந்த சிறுமிகளின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இதில் பழனிவேலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டரையும், 4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 2 சிறுமிகளுக்கு நிவாரண தொகையாக தலா ஒரு லட்சம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.