
தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் செல்வப் பெருந்தொகை தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது 10 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது உள்ளாட்சித் தேர்தலில் 20% இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்க வேண்டுமாம். அப்படி ஒதுக்கவில்லை எனில் தனித்துப் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் மேலிடத்திற்கு வலியுறுத்தியுள்ளனர். அதோடு திருமாவளவன் ஆட்சியில் பங்கு கேட்டது போன்று நாமும் அந்த கோரிக்கையை திமுகவிட முன்வைக்க வேண்டும் என நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதே சமயத்தில் திமுக அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சியினரை கண்டு கொள்வதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி கேட்டபடி 20 சதவீத இடங்களை திமுக ஒதுக்கவில்லை எனில் உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.