திமுக மாநாட்டில் கலைஞரின் பேணா என்ற தலைப்பில் பேசிய கரு. பழனியப்பன், உடன்பிறப்புகளுக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய கடிதங்கங்களில் வால்டர், ரூசோ, மார்க்ஸ், மா சே துங் அவ்வளவு பேரை பத்தியும் எழுதி முடிச்சுட்டு…  கடைசியான கடிதத்தில் அவர் சொல்றாரு….  இந்த கடிதம் இவ்வளவு சிறப்பாக இருந்தது. நெல்லையில் இவ்வளவு சிறப்பா நடந்துச்சு அப்படின்னு….

இன்னைக்கு கலைஞர் இருந்திருந்தால் நாளை முரசொலியில் என்ன எழுதி இருப்பாரு என்று நான் நெனச்சு பாக்குறேன்….  என்ன நெனச்சு பாக்குறேன் அப்படின்னா….  இதை  போல,  சேலத்தில் இப்படி கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் கூடி கூட்டம் நடத்துவது என்பது கலைஞருக்கு தன் தொண்டர்களை பார்ப்பதை விடவும் பெரிய மகிழ்ச்சி இருக்க முடியாது.

அந்த மகிழ்ச்சியோடு இருந்திருப்பார்.  அந்த மகிழ்ச்சியைத்தான் தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் நான் தொண்டர்களின் முதலாம் ஆனவன் அப்படின்னு சொல்லிட்டு இருக்காரு. நம்ம இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வர் ஆவாரா ? இல்லையா ? எப்பொழுது ஆகப் போகிறார் ? என்று எல்லோரிடமும் பேச்சு நடந்து கொண்டு இருந்த பொழுது….

நம்முடைய உதயநிதி ஸ்டாலின் அவர்கள்….  அவருக்கே உரிய பாங்கோடு நாங்கள் அமைச்சர்கள் எல்லாருமே முதல்வருக்கு துணையாக தான் இருக்கிறோம். அதனால எனக்கு தனியா ஒன்னும் கிடையாது, அப்படின்னு ஒரு பதில் சொன்னாரு….  கரெக்டு தான் முதல்வருக்கு துணையாக இருக்கிற அமைச்சர்களில் நீங்கள் முதல்வர் என்பதால்,  நீங்கள் துணை முதலமைச்சர் என நினைச்சு, எல்லாரும்  சொல்லிட்டு இருக்காங்க. அப்படி ஒரு கருத்து இருக்கு இல்ல…. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை நான் எப்படி பார்க்கிறேனா….

இன்னைக்கு தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் தந்தையாய், அண்ணனாய், மகனாய், உடன் பிறந்தவனாய், இந்த தமிழ்நாட்டுப் பெண்கள் நினைப்பதற்கான காரியங்களை ஸ்டாலின் அவர்கள் நிகழ்த்தி காட்டியது இருக்குறது இருக்குல்ல….  அது பெண்களுக்கான இலவச பயணம், புதுமை பெண் திட்டமாக இருக்கலாம், மகளிர் உரிமை திட்டமாக இருக்கலாம் என தெரிவித்தார். இந்த திட்டங்களை இனி ஒருபொழுதும் தமிழ்நாட்டில் எவருமே மாற்ற முடியாது என்பதுதான் நம்முடைய தலைவர் அவர் செய்த மிகப்பெரிய சாதனையாக நான் நினைக்கிறேன் என தெரிவித்தார்.