
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மண்டி மாவட்டம் பத்ரிகாட் பகுதியில் உள்ள சாலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த தகவல் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் 25 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் விபத்தில் சிக்கிக்கொண்ட சிலரை மீட்பதற்காக தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் காவல்துறையினர் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.