2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 23 – 24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

காகிதம் இல்லா இ- பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்று பிற்பகலில் அலுவல் ஆய்வு குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது ? என்பது குறித்து முடிவு செய்யும். கடந்த ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் படி முதல் முறையாக தமிழகத்தின் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் வரும்  19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும். தொழிற்பயிற்சி நிலையங்கள் 2877 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்கு ஆயிரம் கோடி ஒதுக்கீடு. 120 கோடி செலவில் அம்பத்தூரில் உலகளாவிய பயிற்சி மையம் அமைக்கப்படும். 110 கோடியில் 4 , 5ஆம்  வகுப்புக்கு என்னும் எழுத்தும் திட்டம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள சிப்காட் மேம்படுத்தப்படும் என்றார்.