மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் தொடர் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் தாக்கல் தொடருக்கு முன்பாக அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடாயில் அல்வாயை கிளறி மாநிலங்களவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பரிமாறுவார்.

கடந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெறாத நிலையில் இந்த வருடம் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜனவரி 26ம் தேதி  நிர்மலா சீதாராமன் அனைவருக்கும் அல்வா பகிர இருக்கிறார். மேலும் மத்திய பட்ஜெட் தாக்கல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை குறிக்கும் வகையில் இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்று அனைவருக்கும் அல்வா பகிரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.