தமிழக சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சென்னையில் உள்ள நேரு திறந்தவெளி  விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்துவதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.