சஞ்சார் நிகம் லிமிடெட்(BSNL) மற்றும் மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட்(MTNL) இன் சொத்துக்களை விற்கப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை விற்று நிதி திரட்ட போவதாக அரசு முடிவு செய்துள்ளது. MTNL இன் செயல்பாடுகள் முறையாக கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி BSNL உடன் இணைக்கப்பட்டதாக தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்யா சந்தியா தெரிவித்தார். MTNL கடன் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி நிலவரப்படி, நிலுவையில் உள்ள நிறுவனத்தின் மொத்த கடன் ரூபாய் 31,944.51 கோடி ஆகும்.

இந்தியன் வங்கியில் ரூ. 1000 கோடி கடனை MTNL திருப்பி செலுத்த வேண்டும் மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூகோ வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ. 5726.29 கடன் தவணைகளையும் கட்ட வேண்டும். ஆகவே BSNL மற்றும் MTNL நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்து ரூ.16 ஆயிரம் கோடி நிதி திரட்ட உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு தேசிய நில நாணய மயமாக்கல் கழகம் மற்றும் மத்திய பொது நிறுவனத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.