BSNL  நிறுவனமானது தன் வாடிக்கையாளர்களுக்கு இதுவரையிலும் வழங்கி வந்த விலை குறைவான சூப்பரான ப்ராட்பேண்டு திட்டங்களை நீக்கி இருக்கிறது. அதாவது, BSNL பாரத் பைபர் ரூபாய்.275 திட்டத்துடன் சேர்த்து ரூபாய்.775 திட்டத்தையும் நிறுத்தி இருக்கிறது. இத்திட்டங்களுக்கு இடையிலான ஒற்றுமை என்னவெனில் 2 ப்ராட்பேண்டு திட்டங்களும் 75 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது.

இத்திட்டங்கள் அனைத்தும் கடந்த வருடம் சுதந்திர தின விழாவின் சமயத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகும். இப்போது BSNL நிறுவனம் இத்திட்டங்களில் இறுதி தேதியை தன் வலைத்தளத்திலிருந்து நீக்கி உள்ளது. இதன் காரணமாக நிறுவனம் இவற்றை நீக்குவதாக கூறப்படுகிறது.