
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் அன்றே 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் மார்ச் 15ஆம் தேதி அன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலுறையும் நடைபெற்றது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து ஒன்றிய அரசு மீட்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மீனவர்களின் சிக்கல்களுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு என்று தெரிவித்தார்.