
சென்னையில் அனுமதி இன்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதாக தமிழிசையை காவல்துறையினர் கைது செய்தனர். தடையை மீறி மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் அவர் கையெழுத்து பெற முயன்றதாக கூறி காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினார்.
அமைதியான முறையில் கையெழுத்து இயக்கம் நடத்தினால் அதை தடுப்பதா என்று கேள்வி எழுப்பியதால் அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்ற காவல்துறையினர் முயற்சி செய்தனர். இதனால் பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.