தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் ஆளை வளாகத்தில் அபாயகரமான கழிவுகள் தேங்கி இருப்பதால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் பாத்திமா உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றி சீரமைப்பது குறித்து முடிவெடுக்க இரண்டு வாரங்களில் குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.