நாமக்கல், பரமத்திவேலூரில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமசிவம் (74), பஞ்சவர்ணம் (62) தம்பதி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களை யாரும் கவனிக்கவில்லை. இதனால், மனம் உடைந்த இருவரும் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.