தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி தெலுங்கானாவின் ஆதிலாபாத்தில் இன்று அதிகபட்சமாக 16 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். அதோடு ஆந்திராவின் நந்தியால் மற்றும் கர்னூலில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.