
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் அன்றே 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் மார்ச் 15ஆம் தேதி அன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிலுறையும் நடைபெற்றது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டு மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்பதை ஒன்றிய அரசு மறந்து விடுகிறது என்பதால் இந்திய மீனவர்கள் என மீண்டும், மீண்டும் நினைவுபடுத்த அவசியம் ஏற்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பாஜக ஆட்சி அமைத்ததால் ஒரு மீனவர் கூட கைது செய்யப்பட மாட்டார்கள் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் 97 இந்திய மீனவர்கள் சிறையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஒரு நாளைக்கு 2 மீனவர்களை இலங்கை கைது செய்துள்ளது.