ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருவதாக குற்றம் சாட்டினர். இதை கண்டித்து இந்த பிரச்சனை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து மீனவர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மீனவர்களின் 3 கோரிக்கைகளை நிறைவேற்றி தந்துள்ளது இதனால் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அதோடு தற்போது அவர்கள் போராட்டத்தையும் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.