சி.பி.ஐ. சிறப்பு இயக்குநராக டி.சி. ஜெயினை நியமிக்கும் முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான மத்திய பணியாளர்கள் தேர்வுத்துறை பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக பணியாற்றிவரும் அவர், அக்டோபர் 31ம் தேதி வரை அல்லது, மறுஉத்தரவு வரும்வரை இதே பதவியில் நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது.