அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொள்கையை என்றும் விட்டுத்தர மாட்டார் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, சிண்டு முடிவதே ஆர் எஸ் பாரதியின் வேலை. அவரின் அறிக்கைகள் எல்லாம் உண்மையாக இருக்காது என்பதில் மக்கர் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சுயமரியாதையோடு கொள்கையை விட்டுக் கொடுக்காத இயக்கமாக என்றைக்கும் அதிமுக இருக்கும். எல்லா பிரச்சனைகளையும் திசை திருப்பி ஊடகத்தில் பேசவைத்து மடைமாற்றும் அரசியல் தான் திமுக செய்கிறது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்ததுமே மக்கள் முடிவு செய்துவிட்டனர் கண்டிப்பாக அதிமுக ஆட்சி இபிஎஸ் தலைமையில் உறுதி என்று.

இன்னும் அதிகமான கட்சிகள் இபிஎஸ் தலைமையில் இணையும். வக்பு வாரிய திருத்த மசோதா வந்தபோது கூட அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தே வாக்களித்தனர். எனவே கொள்கை வேறு கூட்டணி வேறு திமுகவினர் சுயநலத்திற்காக எப்படி வேண்டுமானாலும் பேசுவர். முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணா வீடியோ குறித்து முன்கூட்டியே எதுவும் சொல்லப்படவில்லை.

அண்ணா பற்றி பேசியதால் கடந்த 2024 ல் இபிஎஸ் என்ன முடிவெடுத்தார் என அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.