
தி.மலை அருகே தண்டரை அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட சுமார் 50 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.