காவிரி விவகாரத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து, அக்டோபர் 16ம் தேதி கும்பகோணத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் காவிரிநீர் திறக்கப்படவில்லை. கர்நாடக காங்., அரசை கண்டிக்காமல் கண்துடைப்பு தீர்மானத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.