12 மணி நேர வேலை சட்ட மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், ”வேலை வாய்ப்பினை பெருக்கிடும் நோக்கில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் மசோதா நிறுத்திவைக்கப்படுகிறது.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.