கடந்த 2 வாரமாக வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த 5 நாளுக்கு வெப்பநிலை 2 டிகிரி – 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என மக்களுக்கு நிம்மதியான செய்தியை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. மேலும், நாளை தென் தமிழகம், டெல்டா, அதையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் ஏப்.13 முதல் 3 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால், வெயிலின் தாக்கம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.