வரலாறு காணாத வகையில் பெய்யும் மழை பாதிப்பு தொடர்பாக கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்த மேலும் 7 அமைச்சர்களை நியமித்து, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். போர்க்கால அடிப்படையில் மீட்பு, நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. சவாலான நேரத்தில் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகிறது. சென்னையில் தூய்மைப்பணிகளை விரைவுபடுத்த பிற மாவட்டங்களில் இருந்து 1000 பணியாளர்கள் வரவழைக்கப்படுவதாக தெரிவித்தார்.