மிக்ஜாம் புயல் எதிரொலியாக 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை வெளுத்து வாங்கும் என்பதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.