மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும்  பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வரும் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற அரசியல் தீர்மானம் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், குடிநீர், வீட்டு வரி, சொத்து வரி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் குறித்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதனுடன், உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பதும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியே பாமக தலைவராக தொடர வேண்டும் என்பதும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவுகள், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.