ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் நேற்று இரவு 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், பாசஞ்சர் ரயிலில் பயணித்தவர்களின் விவரம் அறிந்து கொள்வதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது