தமிழ்நாட்டில் உள்ள 185 தொகுதிகளில், பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். பூத் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விஜய் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பூத் கமிட்டி விவரங்களை வெளியிடுவதில் குளறுபடி என தாம்பரம் தொகுதி மாவட்ட தலைவர் மின்னல் குமாரை எச்சரித்த அவர், சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளை பாராட்டவும் செய்தார்