மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டிகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. லக்னோ-ராமேஸ்வரம் சுற்றுலா ரயிலின் கேண்டீனில் சமையல் செய்தபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ, மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளிலும் பரவியது. இதில் அப்பெட்டிகளில் இருந்து பலர் தப்பிய நிலையில், ஒரு சிலர் மட்டும் உள்ளே சிக்கியுள்ளனர்