மதுரை மாட்டுத் தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின் மூன்றாவது மாடியில் சற்றுமுன் தீ விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் போராடிவரும் நிலையில் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.