தற்போதைய இளம் தலைமுறையினர் எந்த வித பயமோ, தயக்கமோ இல்லாமல் உடலில் தாங்கள் விரும்பும் இடங்களில் பிடித்தமான டிசைன்களில் பச்சை குத்திக் கொள்கின்றனர். இதனிடையே டாட்டூவை பாதுகாப்பாக போடவேண்டும் என அடிக்கடி நிபுணர்கள் அறிவுரை கூறி வருகின்றனர். இந்நிலையில் பழனியில் வட மாநிலத்தவர்கள் பலர் டாட்டூ போடும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டணம் குறைவு என்பதால் இவர்கள் ஒரே ஊசியை அனைவருக்கும் பயன்படுத்துவதாகவும், இதனால் எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் பறந்தன. இது குறித்து அந்த தொழிலாளர்களை அழைத்து அதிகாரிகள் ஒரே ஊசியை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்து அனுப்பினர்.