
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓபிஎஸ் உட்பட 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பிலும், டிவிஷன் வாக்கெடுப்பிலும் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் சபாநாயகர் அப்பாவு அவைக்கு தலைமை தாங்கினார். மேலும் நடுநிலையோடு சட்டமன்றம் நடைபெறும் என அப்பாவு கூறினார்.
இந்த நிலையில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை. நீங்களே நிறுத்திவிட்டு தான் சென்றீர்கள். அந்த திட்டத்தை சரி செய்து மீண்டும் மடிக்கணினி வழங்குவதாக தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம் என எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.