2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பை 2020 ஆம் ஆண்டு தொடங்கி 2021 இல் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த பணிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.