மகளிருக்கு 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக் கிழமை தொடங்கி வைக்க இருக்கிறார். அத்திட்டத்தில் சிலருக்கு அரசே முன்வந்து ATM கார்டுகளை வழங்குகிறது. அதற்கான கார்டுகள் ரேஷன் கடைகளுக்கு வங்கிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் பயனாளர்கள் ரேஷன் கடைகளில் அந்த ஏடிஎம் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.