பொன்முடி மற்றும் அவரது மனைவி சரணடைவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி சதீஷ் சந்திர சர்மா விசாரணை செய்தார். பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியும் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது உச்ச நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் சரணடைய பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சொத்துகுவிப்பு வழக்கில் ஹைகோர்ட் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் பொன்முடி.