தமிழகத்தில் வெவ்வேறு போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகளில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்ததால் அதனை மாற்றி ஒரே கட்டணத்தை போக்குவரத்து அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. தூரத்தை கணக்கிட்டு கட்டண நிர்ணயம் செய்யப்படுவதால் பைபாஸ் ரைடருக்கு வேறு கட்டணம், ஊருக்குள் செல்லும் பேருந்துகளுக்கு என வேறு கட்டணம் இருந்து வந்தது. இதனை சீர்படுத்தி தற்போது ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.