
புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவும் ஆன ஜெகன் மூர்த்தியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அவரை ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது தேனியை சேர்ந்த ஒரு பெண் திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதில் அந்த பெண்ணை கடத்திவிட்டதாக அவரின் தந்தை போலீசில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து வழக்கறிஞர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் ஜெகன் மூர்த்தி சொன்னதால்தான் அந்த பெண்ணை கடத்தியதாக போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஜெகன் மூர்த்தி வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு அவரது ஆதரவாளர்கள் குவிந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மேலும் இதை தொடர்ந்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜெகன் மூர்த்தியை கைது செய்துள்ளனர்.