தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் சற்று நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இது தமிழகத்தில் படகடலோர பகுதிக்கு அருகே டிசம்பர் மூன்றாம் தேதி மிக்ஜாம் புயலாக வலுப்பெற்ற சென்னை நோக்கி நகரும். அதன் பிறகு டிசம்பர் 4 ஆம் தேதி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்திற்கு சற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இன்று முதல் பல மாவட்டங்களிலும் மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.