தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னனி பாடகி வாணி ஜெயராம். இவர் சென்னையில் உள்ள தன் வீட்டில் சற்று முன் உயிரிழந்தார். கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவருடைய மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 13 மொழிகளில் பாடல்களை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.