முதல்வர் ஸ்டாலின் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், கடலூர் வள்ளலார் சத்தியஞான சபையை சுற்றி சர்வதேச மையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக போராட்டம் அறிவித்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் 700க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சத்தியஞான சபை முன்பாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.