தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி திறந்த உடனே வெள்ளத்தால் சான்றிதழ் மற்றும் பாட புத்தகங்களை இழந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதனைப் போலவே வெள்ளத்தில் இறந்த குடும்ப அட்டை, லைசன்ஸ், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.