நடிகர் விஜயகாந்தின் இறுதி சடங்கு நேற்று அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது இறுதி சடங்கு தொடர்பாக புரோகிதம் செய்தவர் அளித்த பேட்டியில், கேப்டன் விஜயகாந்த் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றால், வைணவம் என்று சொல்லக்கூடிய பெருமாள் மந்திரங்களை ஓதி காரியம் செய்ய வேண்டும் என கூறினார்.

அதே சமயத்தில் அந்த பாடல்கள் அனைத்தும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழியில் இருக்கக் கூடாது எனக் கூறியிருந்தார். அதனால்தான் தமிழில் மந்திரம் ஓதி இறுதி சடங்கு செய்தோம் என அவர் கூறியுள்ளார். மேலும் இது கேப்டனின் கடைசி ஆசை எனவும் தெரிவித்ததாக அவர் கூறியிருந்தார்.