
சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் மன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வெற்றிக்கு பிறகு முதல்வர் ஸ்டாலினை பத்திரிக்கையாளர் மன்ற குழு நேரில் சந்தித்தனர். அப்போது பத்திரிக்கையாளர் மன்ற கட்டிடத்தின் உட் கட்டமைப்பை மேம்படுத்த அரசு சார்பில் நிதி ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை தற்போது அரசு பரிசீலனை செய்த முன்னிலையில் 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை பத்திரிக்கையாளர் கட்டிடத்தின் உட் கட்டமைப்பை மேம்படுத்த ரூபாய் 2.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.