நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தில் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 15 வது தவணை தொகையை எட்டு கோடிக்கு மேலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் 18000 கோடியை ஜார்கண்ட் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று விடுவித்தார். இதனைத் தொடர்ந்து வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்