சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கிளப் நிலத்துக்கு செலுத்த வேண்டிய 730 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாததால் அந்த வளாகத்திற்கு தமிழ்நாடு அரசு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது. இதைத்தொடர்ந்து கிண்டி ரேஸ் கிளப் பூங்காவாக மாற்றப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு அதற்கான டெண்டரை கோரியுள்ளது. அதன்படி கிண்டி ரேஸ் கிளப்பிடமிருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலத்திலிருந்து பசுமை பூங்கா அமைகிறது.

இதற்காக விரிவான திட்ட அறிக்கை, வடிவமைப்பு தயார் செய்ய தமிழ்நாடு அரசு தற்போது டெண்டர் கோரி உள்ளது. மேலும் இந்த பூங்கா வண்ணமலர் படுகைகள், மலர் சுரங்கப்பாதை, தோட்டங்கள், கண்ணாடி மாளிகை, பறவைகள் இடம் மற்றும் வண்ணத்துப்பூச்சி தோட்டம் என 25 வகையான வசதிகளுடன் உருவாகிறது.

கடந்த வருடம் செப்டம்பரில் ரூ.4832 கோடி மதிப்பில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது டெண்டர் கோரி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.