மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளின் பாதுகாப்பை பலப்படுத்தவும், முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு மற்றும் மோப்பநாய் உதவியுடன் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.