ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் நள்ளிரவில் கைது செய்துள்ளது. மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி நெடுந்தீவு அருகே இலங்கை ராணுவத்தினர் அவர்களை சிறை பிடித்துள்ளனர். அதோடு 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தின் மூன் ஆஜர் படுத்தப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.