
சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்புவில் இருந்து சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் மும்பைக்கு சென்றது. இந்த சரக்கு கப்பல் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை பார்த்ததும் கப்பலில் இருந்த 18 ஊழியர்களும் கடலில் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து அறிந்த இந்திய கடற்படை கப்பல் கடலில் குதித்த ஊழியர்களை மீட்பதற்கு விரைந்து சென்றுள்ளது.