இந்தாண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 2 மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகிய 2 மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்த மருத்துவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19க்கு எதிராக பயனுள்ள எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை உருவாக்க உதவிய நியூக்ளியோசைட் அடிப்படை மாற்றங்கள் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான 2023 நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி கண்டறிந்தவர்களில் முக்கியமானவர்கள் என்பதாலும்,  மருத்துவத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததாலும் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு  இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.