
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவருடைய வீடு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் உள்ளது. இங்கு வழக்கமாக இரண்டு போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஆனால் தற்போது கூடுதலாக இரண்டு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த விழாவினை செங்கோட்டையன் புறக்கணித்த நிலையில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்களை நிராகரித்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்ததால் தான் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை எனவும் எங்களை வளர்த்து விட்டதே ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் தான் என்றும் கூறினார். இந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய நிலையில் அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக தான் தற்போது செங்கோட்டையன் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.