சென்னை ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் இன்று திடீரென பாலம் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டிருந்த இரண்டு பெரும் ராட்சத தூண்கள் திடீரென இடிந்து கீழே விழுந்தன.

இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதையடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அருகிலுள்ள மக்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.